follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉலகம்பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் உரை

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் உரை

Published on

தமது தாயாரான மறைந்த மகாராணி எலிசபெத் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக ‘விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன்’ சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக நியமிக்கப்பட்ட சார்ல்ஸ், முதன்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

‘ என் அன்புக்குரிய தாய் – எனக்கும் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தார். மேலும் எந்தவொரு குடும்பமும் தங்கள் தாய்க்கு செலுத்த வேண்டிய இதயப்பூர்வமான கடனை நாங்கள் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம்’ என்று சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.

‘மகாராணி அசைக்க முடியாத பக்தியுடன் செயற்பட்டமையை போன்று நானும் இப்போது கடவுள் எனக்குக் கொடுக்கும் எஞ்சிய காலம் முழுவதும் நமது தேசத்தின் அரசியலமைப்புக் கொள்கைகளை நிலைநிறுத்த உறுதியளிக்கிறேன் என்று சார்ல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

‘என் வாழ்நாள் முழுவதும் நான் உங்களுக்கு விசுவாசம் மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ய முயற்சிப்பேன்.’ என்றும் அவர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய 10 வருட ‘ப்ளூ ரெசிடென்சி’ விசாவை அறிவித்தது

சுற்றுசூழல் சட்டத்தரணிகளுக்கு நீண்ட கால வதிவிடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. ‘ப்ளூ ரெசிடென்சி’ (Blue Residency) என்று அழைக்கப்படும்,...

ஐரோப்பிய ஒன்றிய விசாரணையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான தளங்கள் குழந்தைகளுக்கு அடிமையாக்கும் நடத்தையை ஏற்படுத்துகின்றன என்ற சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் பேஸ்புக்...

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்ற தென்னாப்பிரிக்கா

ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு...