follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுரயில் பயண சீட்டுக்களுக்கு தட்டுப்பாடு!

ரயில் பயண சீட்டுக்களுக்கு தட்டுப்பாடு!

Published on

ரயில் பயணச் சீட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், குறித்த பற்றாக்குறையை தீர்ப்பதற்காக, முன்னர் அச்சிடப்பட்டு பயன்படுத்தப்படாத பயணச்சீட்டுகளை பயன்படுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக திணைக்களத்தின் வர்த்தக அத்தியட்சகர் வஜிர பொல்வத்த தெரிவித்தார்.

தென் பகுதி ரயில் பாதையில் பயணச்சீட்டுக்களுக்கு தட்டுப்பாடு உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பயன்படுத்தப்படாத பயண சீட்டுக்கள் சேவைக்கு பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரயில் ஆசனங்களை, முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்படவுள்ளது.

ரயில் ஆசனங்களை ஒதுக்கிக்கொள்வதற்கான அதியுச்ச காலம், 14 நாட்களாக இருந்தநிலையில் தற்போது, அது 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...