follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநிலக்கரி வழங்குனர்களின் இறுதித் தீர்மானம்!

நிலக்கரி வழங்குனர்களின் இறுதித் தீர்மானம்!

Published on

நிலக்கரி கொள்வனவுக்கான மாற்று யோசனைகள் தொடர்பான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான வழங்குனர்களுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்வேறு அரசியல் மற்றும் வியாபார நோக்கங்களுக்காக நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் சமூகத்தில் நெருக்கடியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறைந்த விலைக்கு நிலக்கரியை டெண்டர் முறை மூலம் கொள்முதல் செய்ய தேர்வு செய்யப்பட்ட வழங்குனர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக தீர்க்கப்படும் வரை நிலக்கரி வழங்கலை மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இழக்கப்பட்ட லக்விஜய அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி விநியோகத்தை மீளப் பெற்று, குறித்த தரப்பினருக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் குறித்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...