follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநிலக்கரி வழங்குனர்களின் இறுதித் தீர்மானம்!

நிலக்கரி வழங்குனர்களின் இறுதித் தீர்மானம்!

Published on

நிலக்கரி கொள்வனவுக்கான மாற்று யோசனைகள் தொடர்பான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான வழங்குனர்களுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்வேறு அரசியல் மற்றும் வியாபார நோக்கங்களுக்காக நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் சமூகத்தில் நெருக்கடியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறைந்த விலைக்கு நிலக்கரியை டெண்டர் முறை மூலம் கொள்முதல் செய்ய தேர்வு செய்யப்பட்ட வழங்குனர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக தீர்க்கப்படும் வரை நிலக்கரி வழங்கலை மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இழக்கப்பட்ட லக்விஜய அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி விநியோகத்தை மீளப் பெற்று, குறித்த தரப்பினருக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் குறித்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...