follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுநிலக்கரி வழங்குனர்களின் இறுதித் தீர்மானம்!

நிலக்கரி வழங்குனர்களின் இறுதித் தீர்மானம்!

Published on

நிலக்கரி கொள்வனவுக்கான மாற்று யோசனைகள் தொடர்பான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான வழங்குனர்களுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்வேறு அரசியல் மற்றும் வியாபார நோக்கங்களுக்காக நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் சமூகத்தில் நெருக்கடியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறைந்த விலைக்கு நிலக்கரியை டெண்டர் முறை மூலம் கொள்முதல் செய்ய தேர்வு செய்யப்பட்ட வழங்குனர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக தீர்க்கப்படும் வரை நிலக்கரி வழங்கலை மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இழக்கப்பட்ட லக்விஜய அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி விநியோகத்தை மீளப் பெற்று, குறித்த தரப்பினருக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் குறித்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...