முன்னணி அரச கூட்டுத்தாபனங்களால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம்-மத்திய வங்கி ஆளுநர்

657

அரச கூட்டுத்தாபனங்களினால் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை போக்குவரத்து சபை போன்ற நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கும் முன்னணி நிறுவனங்களாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன் அந்த நிறுவனங்களால் ஏற்படும் நட்டத்தை அரசாங்கத்தால் இனியும் தாங்க முடியாது எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here