மின்சார துறைக்கு அமைச்சர் ஒருவரை நியமித்து இருப்பது மின்சாரத்தை துண்டிப்பதற்காக இல்லை மக்களுக்கு ஆதரவாக இருந்து மின்சார பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை தருவதற்கே என தேரர் ஓமல்பெ சோபித்த ஹிமி தெரிவித்துள்ளார்
மேலும் சமய அலுவலகங்களில் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் இது ஒரு தேவையற்ற கட்டண அதிகரிப்பு எனவும் அதனை தாம் செலுத்தப்போவதில்லை எனவும் தேரர் ஓமல்பெ சோபித்த ஹிமி தெரிவித்துள்ளார்
மின்சார கட்டண அதிகரிப்பை கண்டித்து அனைத்து சமய மத தலைவர்களும் ஒன்று சேர்ந்து செப்டம்பர் 20ம் திகதி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தேரர் ஓமல்பெ சோபித்த ஹிமி தெரிவித்துள்ளார் .