follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Published on

30 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற வகையில் சம்பாதித்தமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 05 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, சாட்சி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஸவுக்கு சொந்தமான கவர்ஸ் கோப்பரேட் சர்விஷஸ் நிறுவனத்திற்கு எதிராக, நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஸ, சுஜானி போகொல்லாகம மற்றும் நித்தியா சேனானி சமரநாயக்க ஆகிய பிரதிவாதிகளுக்கு தேவையேற்படும் பட்சத்தில் வௌிநாட்டிற்கு செல்ல அனுமதி வழங்குமாறு, பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டிற்கு செல்லும் திகதி மற்றும் நாடு திரும்பும் திகதி ஆகியவற்றை குறிப்பிட்டு நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்யுமாறு இதன்போது நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...