follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Published on

30 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற வகையில் சம்பாதித்தமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 05 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, சாட்சி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஸவுக்கு சொந்தமான கவர்ஸ் கோப்பரேட் சர்விஷஸ் நிறுவனத்திற்கு எதிராக, நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஸ, சுஜானி போகொல்லாகம மற்றும் நித்தியா சேனானி சமரநாயக்க ஆகிய பிரதிவாதிகளுக்கு தேவையேற்படும் பட்சத்தில் வௌிநாட்டிற்கு செல்ல அனுமதி வழங்குமாறு, பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டிற்கு செல்லும் திகதி மற்றும் நாடு திரும்பும் திகதி ஆகியவற்றை குறிப்பிட்டு நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்யுமாறு இதன்போது நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தனர்

ஈரானிய ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மாலெக் ரஹ்மதி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த...

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் வலுப்பெறுகிறது

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...