2022 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்குகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
விஞ்ஞானம், வர்த்தகம், தொழிநுட்பம், கலை ஆகிய சகல பிரிவுகளையும் உள்ளடக்கிய இக் கருத்தரங்குகள் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வளங்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அமைப்பதன் மூலம், மாணவர்கள் நம்பிக்கையுடன் உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வழிகாட்டுதலும் தைரியமும் கிடைக்கும் என கல்வி அமைச்சர் எதிர்பார்க்கிறார்.