follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமாணவர்களிடையே மோதல் - நால்வர் வைத்தியசாலையில்

மாணவர்களிடையே மோதல் – நால்வர் வைத்தியசாலையில்

Published on

பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி கற்கும் மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் நால்வர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இதில் இரண்டு மாணவிகளும் உள்ளடங்குவதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு ஆதரவான மற்றும் எதிரான இரு மாணவர் குழுக்களிடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

சட்டபீடத்தில் இரண்டாம் மூன்றாம் வருடங்களில் கல்வி பயிலும் மாணவர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

நேற்று (14) மாலை பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், 30 பேர் கொண்ட மாணவர்கள் குறித்த நான்கு மாணவர்களையும் தாக்குவதற்கு வருகைத் தந்துள்ளதாகவும் இவர்கள் பகிடிவதைக்கு ஆதரவான மாணவர்கள் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பேராதைனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...