follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஎக்ஸ்-பிரஸ் பேர்ல் இழப்பீட்டைக் கண்காணிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரை!

எக்ஸ்-பிரஸ் பேர்ல் இழப்பீட்டைக் கண்காணிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரை!

Published on

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த X-press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை மீளப் பெறுவதை கண்காணிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கப்பலின் சேத மதிப்பீடு மற்றும் நட்டஈட்டை மீளப்பெறும் நடவடிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்டு நட்டஈட்டை மீளப்பெறும் நடவடிக்கையை கண்காணிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது.

கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கான நட்டஈட்டை மீளப்பெறும் நடவடிக்கை தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

X-Press Pearl கப்பல் இலங்கைக் கடலில் மூழ்கிய போது கப்பலில் 81 கன்டெய்னர்களில் ஆபத்தான பொருட்கள் இருந்ததாகவும் அதில் 25 டன் நைட்ரிக் அமிலம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...