follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஐ.எம்.எஃப் ஒப்பந்தம் குறித்து விளக்கம்

ஐ.எம்.எஃப் ஒப்பந்தம் குறித்து விளக்கம்

Published on

பொருளாதார மீட்சிக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் அடுத்த படிகள் தொடர்பில், அனைத்து வெளி கடனாளிகளுக்கும் செப்டெம்பர் 23ஆம் திகதியன்று, இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளது.

இந்த தெளிவூட்டல் ஒன்லைன் மூலம் இடம்பெறவுள்ளதாக கடன் மறுசீரமைப்பு ஆலோசகர் நிறுவனமான கிளிஃபோர்ட் சான்ஸ், சனிக்கிழமை (17) வெளியிட்ட  அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைய பொருளாதார முன்னேற்றங்கள், நாணய நிதிய பொதியின் நோக்கங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் அடுத்த படிகள் குறித்து கடன் வழங்குநர்களுக்கு இலங்கை நிதியமைச்சு விளக்கமளிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சுமார் 2.9 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 48 மாத ஏற்பாட்டுடன் இலங்கையின் பொருளாதார கொள்கைகளை ஆதரிப்பதற்கான பணியாளர் மட்ட உடன்பாடு, கடந்த 1ஆம் திகதி எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...