இன்று காலை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினனுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு பெலவத்தை ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் வர்த்தகத் தூதுவர் டானியல் பட், மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் மற்றும் மத்திய குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர்.