follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅநுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்

அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்

Published on

வடக்கு  ரயில்வே மார்க்கத்தில் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் போக்குவரத்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது.

இந்தியாவின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வடக்கிற்கான ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன் காரணமாக ஜனவரி மாதம் முதல் 5 மாதங்களுக்கு அநுராதபுரம் தொடக்கம் ஓமந்தை வரையான ரயில் போக்குவரத்து  இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து  அநுராதபுரம் வரை ரயில் மூலம் பயணிக்கும்  பயணிகள், அங்கிருந்து ஓமந்தை வரை பயணிப்பதற்காக பஸ்கள் ஒழுங்கு செய்யப்படவுள்ளன.

பின்னர் ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை செல்வதற்கான ரயில் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...