follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநாட்டில் கோழி, முட்டைக்கு தட்டுப்பாடு!

நாட்டில் கோழி, முட்டைக்கு தட்டுப்பாடு!

Published on

கோழிப்பண்ணைகளில் முட்டையிடும் கோழிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டில் முட்டைகளுக்கு கணிசமான தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோழிப்பண்ணை தொழிலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான விவசாயிகள் தமது தொழிலை கைவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கால்நடை தீவன விலை அதிகரித்துள்ளதால், முட்டைகளை விற்பனை செய்து கிடைக்கும் லாபத்தில் தீவனங்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தற்போதுள்ள முட்டையிடும் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதாக குணசேகர தெரிவித்துள்ளார்.

இனப்பெருக்க நோக்கத்திற்காக அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் 80,000 முட்டையிடும் கோழிகளை இறக்குமதி செய்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு 9,000 மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நாட்டில் கோழிக்குஞ்சுகளுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் எனவும், இந்த நிலை தொடருமானால், தற்போதுள்ள முட்டை மற்றும் கோழிக்குஞ்சு தட்டுப்பாடு தவிர்க்க முடியாததாகிவிடும் எனவும் குணசேகர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...