follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுவெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Published on

சுற்றுலா விசாவின் கீழ் இலங்கை பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக டுபாய்க்கு அனுப்பி மோசடிகளில் ஈடுபடும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஆரம்பித்துள்ளது.

மோசடி செய்பவர்கள் உறுதியளித்தபடி வேலை கிடைக்காததால் துபாயில் உள்ள தடுப்பு மையங்களில் பல பெண்கள் சிக்கித் தவித்ததை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வீசாவில் டுபாய் சென்று இலங்கை திரும்பிய பெண் ஒருவரிடம் மோசடி செய்பவர்கள் உறுதியளித்தபடி வேலை கிடைக்காமல் போனதால் SLBFE வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

டுபாயில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கும் வேலை மோசடி காரணமாக நாட்டில் சிக்கித் தவிக்கும் 85 இலங்கைப் பெண்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளில் முதலீடு செய்து வருகின்றனர், இது பல குற்றவாளிகள் வேலை மோசடிகளில் ஈடுபடுவதற்கும் பொதுமக்களை ஏமாற்றுவதற்கும் உதவியுள்ளது.

SLBFE வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் நபர்கள், அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk ஐப் பார்வையிடவும் அல்லது இது தொடர்பான விசாரணைகளுக்கு 1989 என்ற ஹாட்லைனைத் தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

வேலை மோசடிகள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் SLBFE க்கு 0112 86 42 41 என்ற எண்ணின் ஊடாக தெரிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட...

மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க...

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ‘iPhone’ சமாச்சாரம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தரவு அறிக்கைகள் மற்றும் இரகசியத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும், இதன் காரணமாக, புதிய...