follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுவெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Published on

சுற்றுலா விசாவின் கீழ் இலங்கை பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக டுபாய்க்கு அனுப்பி மோசடிகளில் ஈடுபடும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஆரம்பித்துள்ளது.

மோசடி செய்பவர்கள் உறுதியளித்தபடி வேலை கிடைக்காததால் துபாயில் உள்ள தடுப்பு மையங்களில் பல பெண்கள் சிக்கித் தவித்ததை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வீசாவில் டுபாய் சென்று இலங்கை திரும்பிய பெண் ஒருவரிடம் மோசடி செய்பவர்கள் உறுதியளித்தபடி வேலை கிடைக்காமல் போனதால் SLBFE வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

டுபாயில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கும் வேலை மோசடி காரணமாக நாட்டில் சிக்கித் தவிக்கும் 85 இலங்கைப் பெண்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளில் முதலீடு செய்து வருகின்றனர், இது பல குற்றவாளிகள் வேலை மோசடிகளில் ஈடுபடுவதற்கும் பொதுமக்களை ஏமாற்றுவதற்கும் உதவியுள்ளது.

SLBFE வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் நபர்கள், அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk ஐப் பார்வையிடவும் அல்லது இது தொடர்பான விசாரணைகளுக்கு 1989 என்ற ஹாட்லைனைத் தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

வேலை மோசடிகள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் SLBFE க்கு 0112 86 42 41 என்ற எண்ணின் ஊடாக தெரிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...