follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅரச வாகனங்களை அனுமதியின்றி பயன்படுத்தியமை தொடர்பில் இரண்டு எம்.பி.க்களின் பெயர்கள் வெளியானது!

அரச வாகனங்களை அனுமதியின்றி பயன்படுத்தியமை தொடர்பில் இரண்டு எம்.பி.க்களின் பெயர்கள் வெளியானது!

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தமது உத்தியோகபூர்வ அரச வாகனங்களை மீள ஒப்படைக்கத் தவறியமைக்காக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஜனாதிபதி செயலகம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் K.P.S என்பவரிடம் இருந்து சொகுசு Land Cruiser ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவலவிடமிருந்து  Toyota Hilux கெப் வண்டியொன்றையும் ஜனாதிபதி செயலகம் கைப்பற்றியதாக குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பயன்படுத்திய Toyota Land Cruiser மற்றும் Toyota Hilux Cab ஆகிய இரு வாகனங்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 50 மில்லியன்.

பாராளுமன்ற உறுப்பினர்களான குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகியோர் தமது பொதுப்பணிகளை மேற்கொள்வதற்காக வாகனங்களை கோரியதையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாகனங்களை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து விடுவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...