follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉள்நாடு02 உள்ளூராட்சி நிறுவனத் தேர்தல்களில் வெற்றி பெற்றதாக SLPP அறிவிப்பு

02 உள்ளூராட்சி நிறுவனத் தேர்தல்களில் வெற்றி பெற்றதாக SLPP அறிவிப்பு

Published on

கம்பளை மற்றும் பாணந்துறை கூட்டுறவு சபைத் தேர்தல்களில் வெற்றிகள் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது எமக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகும், இது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் எப்படி இருந்தபோதிலும் எங்களின் ஆதரவுத் தளம் எங்களுடன் இருப்பதைக் காட்டுகிறது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பாணந்துறை கூட்டுறவு சபைத் தேர்தலில், சபையின் மொத்தமுள்ள 87 ஆசனங்களில் பொதுஜன பெரமுன தலைமையிலான குழு 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் எதிர்க்கட்சி தலைமையிலான குழு 34 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இதேவேளை, பொதுஜன பெரமுன தலைமையிலான குழு கம்பளை கூட்டுறவு சபையை பிரதிநிதித்துவப்படுத்த 06 ஆசனங்களை வென்றுள்ளது. எதிர்க்கட்சி தலைமையிலான குழு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...