follow the truth

follow the truth

June, 21, 2025
Homeஉலகம்பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் 'டிராவல் வித் ஜோ' யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

Published on

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல் வித் ஜோ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகின்றார்.

இவர் கடந்த 2023ம் ஆண்டு ஏஜெண்ட் மூலமாக விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றார். அப்போது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஸ் எனப்படும் எஹ்சான் உர் ரஹீம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த டேனிஸ் 2025ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் ஜோதி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜோதியை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் எழுத்து மூலமாக வாக்குமூலம் பெறப்பட்டு இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அகமதாபாத் விபத்து – ஏர் இந்தியா முன்பதிவுகளில் வீழ்ச்சி

அச்சம் காரணமாக ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா அகமதாபாத்தில்...

அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ இஸ்ரேல் – ஈரானுக்கு வட கொரியா ஆதரவு

ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை "கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்" என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது...

சுவிஸ் வங்கியில் அதிக பணம் வைத்திருக்கும் நாடு

சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகமாக காணப்படுவதாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள...