follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்Popular Front of India அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை

Popular Front of India அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை

Published on

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு (Popular front of India organization) மற்றும் அது சார்ந்த அமைப்புகள், துணை அமைப்புகள் ஆகியவற்றுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தீவிரவாத செயல்களுக்கு துணை செய்தல், நிதி திரட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்ததையடுத்து, 11 மாநிலங்களில் என்ஐஏ அமைப்பினர் பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்களை என்ஐஏ அமைப்பினர் கைப்பற்றினர். 11மாநிலங்களி்ல் இருந்து 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் 2வது சுற்றாக நேற்று 8 மாநிலங்களில் தேசிய விசாரணை முகமை சோதனை நடத்தியது. இதில் 150க்கும் மேற்பட்ட பிஎப்ஐ அமைப்புடன் தொடர்பில் இருப்போர், பிஎப்ஐ அமைப்பினர் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சூழலில் மத்திய அரசு இந்தத் தடையை விதித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...