follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுவியாத்புர வீடமைப்புத் திட்டத்தின் முதலாவது வீடு விற்பனை செய்யப்பட்டது

வியாத்புர வீடமைப்புத் திட்டத்தின் முதலாவது வீடு விற்பனை செய்யப்பட்டது

Published on

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் (UDA) சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசின் வேலைத் திட்டத்தின் கீழ் டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் முதலாவது வீட்டைக் கொள்வனவு செய்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வியாத்புர வீடமைப்புத் திட்டத்திலிருந்து இந்த வீடு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடுத்தர வருமானமுள்ளவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு டொலர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு டொலர்களைச் செலுத்தி கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் மூலம் பணம் செலுத்தி வீடுகளைக் கொள்வனவு செய்வோருக்கு 10% கழிவு வழங்கப்படவுள்ளது.

02 படுக்கையறைகளைக் கொண்ட வீட்டின் பெறுமதி 158 இலட்சம் ரூபாவாகும்.

இந்த வீட்டை 10% கழிவுடன் 142 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும்.

வெளிநாடுகளில் தொழில்புரியும் பலர் இந்த வீடுகளைக் கொள்வனவு செய்ய விருப்பப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் தான 10% விலைக் கழிவுடன் 142 இலட்சம் ரூபாவுக்கு டுபாயில் பணி புரிபவர் கொள்வனவு செய்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 275,000 அமெரிக்க டொலர்களைச் சம்பாதிப்பதே நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீடமைப்பு அமைச்சின் நோக்கமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...