follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை!

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை!

Published on

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.

பாரா ளுமன்றில் அடுத்த வாரத்தின் செயற்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நியமிக்கப்படவுள்ள கோப் மற்றும் கோபா உள்ளிட்ட குழுக்களை அமைப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

நாளை பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் கட்சித்தலைவர்கள் கூட்டமும் காலை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நிறுவப்பட்ட தேசிய பேரவைக் குழு நாளை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

அந்த சபைக்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் சமீபத்தில் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...