follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉள்நாடுஅமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்ய உத்தரவு!

அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்ய உத்தரவு!

Published on

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார குறித்து வழங்கப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (28) நீதிப் பேராணையை (ரிட்) பிறப்பித்தது.

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த ஜனவரி 18ஆம் திகதி கிடைத்த அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆணைக்குழுவினால் தான் சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இரத்துச் செய்து நீதிப் பேராணையை (ரிட்) பிறப்பிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மேன்முறையீட்டு நீதின்ற நீதியர்சர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன, டி. எம். சமரகோன் மற்றும் லஃபர் தாஹிர் ஆகியோர் அடங்கிய குழாமினால் அந்த ரிட் மனு குறித்த தீர்ப்பு இன்று (28) வழங்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...