follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பிரதமரிடம் முஸ்லிம் பெண்கள் கோரிக்கை !

பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பிரதமரிடம் முஸ்லிம் பெண்கள் கோரிக்கை !

Published on

அரசியலில் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க விரும்புவதாகவும், எனவே 50% பெண் அரசியல் பிரதிநிதித்துவத்தை நியமனப் பட்டியலில் கட்டாயப்படுத்துமாறும் முஸ்லிம் அரசியல் பெண் செயற்பாட்டாளர்கள் நேற்றைய தினம் ரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கோரிக்கைவிடுத்துள்ளனர்.

வேட்புமனுப் பட்டியலில் பெண் பிரதிநிதித்துவத்தை 50% உயர்த்துமாறு குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்தோம் என அரசியல் செயற்பாட்டாளர் ஃபிரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார்

முஸ்லிம் பெண்களை அரசியலுக்கு வரச் செய்வது மிகவும் கடினம் என்ற பொதுவான கருத்து சில நபர்களிடையே இருப்பதாகவும் வேட்புமனுவில் முஸ்லிம் பெண்கள் இருப்பது சில கட்சிகளின் நலன்களுக்கு எதிரானது என்றும், எனவே இந்தக் கட்சிகள் அதை கட்டாயமாக்க வேண்டாம் என்று விரும்புவதாகவும் ஃபெரியல் அஷ்ரப் தெரிவித்தார்

இதேவேளை, பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்காதவரை தேர்தலில் போட்டியிட கட்சிகளை அனுமதிக்கக் கூடாது என பிரதிநிதிகள் வலியுறுத்தியதாக மன்னார் மகளிர் அபிவிருத்தி சம்மேளனத்தின் இணை நிறுவனர் ஷிரீன் அப்துல் சாரூர் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...