follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுமாலைத்தீவிலிருந்து 17 பேர் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

மாலைத்தீவிலிருந்து 17 பேர் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

Published on

குடியேறிகள் சுகாதார கொள்கையை தயாரிப்பதற்கான அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாலைத்தீவு தூதுக்குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

மாலைத்தீவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் ஷா மக்கீர் உள்ளிட்ட 17 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு நாட்டில் குடியேறிகள் சுகாதார கொள்கை தயாரிக்கப்பட்டது.

அதனை ஆராய்ந்து அந்த நாட்டில் குடியேறிகள் சுகாதார கொள்கையை தயாரிப்பதற்கான அனுபவத்தை பெற்றுக் கொள்வதே அந்த தூதுக்குழுவின் நோக்கமாகும்.

சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் குறித்த தூதுக்குழுவினருக்கும் இடையிலான விஷேட செயலமர்வு கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுகாதாரத்துறையில் காணப்படும் முன்னேற்றம், ஒத்துழைப்பு, அனுபவம் என்பன தொடர்பில் கருத்து பரிமாறப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள்

வெசாக் தினத்துடன் இணைந்து, நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள்...

ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு...