follow the truth

follow the truth

February, 18, 2025
Homeவிளையாட்டுஅணி வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை கிரிக்கெட்

அணி வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை கிரிக்கெட்

Published on

சுற்றுலா தென்னாபிரிக்கா அணியுடனான டி-20 தொடரின்போது இலங்கை அணி வீரர்கள் சிலர் முழுமையான அர்ப்பணிப்புடன் போட்டிகளில் விளையாடவில்லை என சில ஊடக அறிக்கைகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மறுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை வென்ற ஒருநாள் தொடரில் விளையாடிய அதே குழுவினர் தான் டி-20 தொடரிலும் பங்கெடுத்தனர் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது மட்டுமல்லாமல், ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண சூப்பர் லீக் தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி சிறப்பான புள்ளிகளைப் பெற்றது.

எனவே ஐ.சி.சி. ஆண்கள் T20 உலகக் கிண்ணம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இது போன்ற தவறான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்த்து, பத்திரிகை நெறிமுறை நடைமுறைகளை உரிய செய்தி நிறுவனங்கள் பின்பற்றுமாறும் இலங்கை கிரிக்கெட் வலியுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐ.பி.எல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியானது

கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐ.பி.எல் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம்...

தேசிய விளையாட்டு சபை நியமனம்

இலங்கையில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் நிர்வாகித்தல் தொடர்பான விடயங்களில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கத்துடன்...

தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 என்ற ஓட்டங்களால் இமாலய...