follow the truth

follow the truth

July, 27, 2024
Homeவிளையாட்டுஅணி வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை கிரிக்கெட்

அணி வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை கிரிக்கெட்

Published on

சுற்றுலா தென்னாபிரிக்கா அணியுடனான டி-20 தொடரின்போது இலங்கை அணி வீரர்கள் சிலர் முழுமையான அர்ப்பணிப்புடன் போட்டிகளில் விளையாடவில்லை என சில ஊடக அறிக்கைகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மறுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை வென்ற ஒருநாள் தொடரில் விளையாடிய அதே குழுவினர் தான் டி-20 தொடரிலும் பங்கெடுத்தனர் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது மட்டுமல்லாமல், ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண சூப்பர் லீக் தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி சிறப்பான புள்ளிகளைப் பெற்றது.

எனவே ஐ.சி.சி. ஆண்கள் T20 உலகக் கிண்ணம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இது போன்ற தவறான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்த்து, பத்திரிகை நெறிமுறை நடைமுறைகளை உரிய செய்தி நிறுவனங்கள் பின்பற்றுமாறும் இலங்கை கிரிக்கெட் வலியுறுத்தியுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய T20 தொடரிலிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

இந்தியாவுடனான T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ விலகியதையடுத்து வரவிருக்கும் போட்டிகளில் அவருக்கு பதிலாக...

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய – பங்களாதேஷ் மகளிர் அணிகள்...

2024 ஒலிம்பிக் திருவிழா நாளை ஆரம்பம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நாளை (26) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. 32 விளையாட்டுப் போட்டிகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ள...