follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகொட்டகலை – போகாவத்த மாணவி தாக்குதல் சம்பவம் – அதிபர் இடமாற்றம்

கொட்டகலை – போகாவத்த மாணவி தாக்குதல் சம்பவம் – அதிபர் இடமாற்றம்

Published on

நுவரெலியா, கொட்டகலை பிரதேசத்தில் மாணவி ஒருவரை துடைப்பத்தால் கொடூரமாக தாக்கிய பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர் பிரதேச வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.

பாடசாலையின் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை பாடசாலையின் விழாவிற்காக பணம் வழங்காத காரணத்தினால் பாடசாலை அதிபர் தாக்கியுள்ளார்.

தனது சகோதரர் கேட்ட பணத்தை வழங்காததால் அதிபர் தம்மை தகாத வார்த்தைகளால் திட்டியதாக காயமடைந்த குழந்தை தெரிவித்தது.

பின்னர் தனது சகோதரர் சார்பாக இந்த விவகாரத்தில் தலையிட்டதற்காக தன்னை துடைப்பத்தால் தாக்கியதாக குழந்தை கூறியது. “அருகில் இருந்த எங்கள் தந்தையிடம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய போதிலும், அவர் என்னை துடைப்பத்தால் அடித்துக் கொண்டே இருந்தார். வகுப்பறைக்குத் திரும்பிய பிறகும், கத்த வேண்டாம் என்று துடைப்பக் கட்டையால் என்னை அடித்தான்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...