follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுகடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Published on

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென மீனவர்கள், கடல்சார் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பிலான அறிவித்தல் ஊடாக வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறித்த கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி முதல் புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே 50 தொடக்கம் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதற்கமைய, காலி முதல் கொழும்பு ஊடாக மன்னார் வரையான கடற்பிரதேசங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...