follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுபுதிய பிரேரணை குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடும் அதிருப்தி!

புதிய பிரேரணை குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடும் அதிருப்தி!

Published on

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

தமக்கு மிகுந்த ஏமாற்றமளித்திருக்கும் இந்தப் பிரேணை பூகோள அரசியலுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் செயலாளர் லீலாதேவி குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் 6 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு வரவிருக்கும் நிலையில் புதிய பிரேரணை குறித்து லீலாதேவி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு தாம் நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்ற போதிலும் அது பிரேரணையில் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...

ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...