நுரைச்சோலை மீள் இணைப்பு வழங்கப்பட்ட போதிலும் மின்வெட்டில் மாற்றம் இல்லை!

514

நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மின்வெட்டுக் காலத்தை குறைக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இரண்டு மணித்தியாலங்களும் இருபது நிமிடங்களுமான மின்வெட்டு மாற்றமின்றி தொடரும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் அலகு ஒன்று சீர்செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தேசிய மின் இணைப்பில் சேர்க்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here