follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுடிக்கெட் எடுக்காத பயணிகளுக்கு அபராதம்

டிக்கெட் எடுக்காத பயணிகளுக்கு அபராதம்

Published on

செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி கொம்பனிவீதி ரயில் நிலையத்திலிருந்து ரயில் அனுமதிச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த பயணித்தவர்களிடமிருந்து அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ரயில் அனுமதிச் சீட்டின்றி 129 பேர் பயணித்துள்ள நிலையில், அவர்களிடமிருந்து நான்கு இலட்சத்து இரண்டாயிரத்து இருநூறு ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொம்பனிவீதி ரயில் நிலையத்திலிருந்து வெளி​யேறுவதற்கான இரண்டு நுழைவாயில்கள் காணப்படுவதுடன், அந்த நுழைவாயில்களில் பயணித்தவர்கள் திடீர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், இதன்போது ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை நுழைவாயில் ஊடாக அனுமதிச்சீட்டுகள் இன்றி பயணித்த 129 பேரிடமிருந்தே இந்த அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொம்பனித் தெரு ரயில்  நிலையத்தில் 18 கனிஷ்ட ஊழியர்கள் இருக்க வேண்டிய போதிலும் தற்போது 06 பணியாளர்கள் மாத்திரமே பணிபுரிவதாகவும் இதன் காரணமாக மற்றைய வெளியேறும் உத்திரானந்த மாவத்தை நுழைவாயிலில் சோதனைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, ​​ரயில் நிலையங்களில் பணியாளர்களுக்கான வெற்றிடங்கள்  அதிகளவில் உள்ளதால், முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து வெளியேறும் நுழைவாயில்களின் தேவையான சோதனைகளை மேற்கொள்ள பணியாளர்கள் இல்லாததால், ஏராளமான பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் நிலை உள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...