follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுசீனாவின் எண்ணெய் விநியோக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை!

சீனாவின் எண்ணெய் விநியோக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை!

Published on

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கும் சீனாவின் பெட்ரோ சைனா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது, நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள், மீள செலுத்தும் முறைமைகள் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ச்சியான விநியோகத்தை மேற்கொள்வது குறித்து ஆராயப்பட்டதாக அமைச்சர் தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் பெட்ரோ சைனா அதிக அளவில் எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதுடன், 10 ஆண்டுகளாக சிறந்த புரிந்துணர்வை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், வெளிநாட்டு எண்ணெய் விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவுகள் நிலுவையில் உள்ளதாக நம்பப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...