follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கையர்களுக்கு ஜப்பானில் மேலும் வேலைவாய்ப்புகள்!

இலங்கையர்களுக்கு ஜப்பானில் மேலும் வேலைவாய்ப்புகள்!

Published on

ஜப்பானின் GTN – Global Trust Network, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஜப்பானில் 1000க்கும் மேற்பட்ட பராமரிப்பாளர் வேலைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எளிதாக்குவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் உறுதியளித்துள்ளது.

ஜப்பானில் உள்ள இலங்கை இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் முயற்சியில் ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் மனுஷ நாணயக்கார, GTN – Global Trust Network இன் தலைவர் ஹிரோயுகி கோட்டோ ( Hiroyuki Goto) திறமையான தொழிலாளர் பிரிவின் முகாமையாளர் யுகா குவஹாரா மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலின் போது, ​​ஜப்பானிய அதிகாரிகள் 150 பராமரிப்பாளர்களுக்கு இந்த வருடமே வேலை வழங்கவும் அடுத்த ஆண்டு மேலும் 1000 தொழிலாளர்களை பணியமர்த்தவும் ஒப்புக்கொண்டனர்.

GTN – Global Trust Network, ஜப்பானின் முன்னணி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் ஒன்றானது, ஜப்பானில் 350,000க்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

இவ்வாறானதொரு புகழ்பெற்ற நிறுவனத்துடன் இணைந்து இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு கிடைத்தமை பெரும் சாதனையாகும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஜப்பானில் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் எதிர்காலத்தில் அந்த நிறுவனத்துடன் இணைந்து செயற்பட இலங்கை திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...