follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுசமுர்த்தி கொடுப்பனவுகளை சீர்செய்வதற்காக QR Code முறை அறிமுகம்

சமுர்த்தி கொடுப்பனவுகளை சீர்செய்வதற்காக QR Code முறை அறிமுகம்

Published on

சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக்கைகளை சீர்செய்வதற்காக QR Code முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

சமுர்த்தி பயனாளிகளைத் தவிர, அரசாங்கத்தின் உதவி தேவைப்படும் நபர்களையும் இந்த அமைப்பில் உள்ளடக்கியதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த அமைப்பில் முதியோர்கள், உடல் ஊனமுற்றோர், நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அரசிடமிருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர்களும் அடங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசின் நிதி உதவி தேவைப்படும் ஏனைய குடும்பங்களையும் இது இணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் நோக்கம், அந்த நலன்புரி நடவடிக்கைகள் தேவைப்படுபவர்களை அடையாளம் காணவும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் உதவுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...