follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுசமுர்த்தி கொடுப்பனவுகளை சீர்செய்வதற்காக QR Code முறை அறிமுகம்

சமுர்த்தி கொடுப்பனவுகளை சீர்செய்வதற்காக QR Code முறை அறிமுகம்

Published on

சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக்கைகளை சீர்செய்வதற்காக QR Code முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

சமுர்த்தி பயனாளிகளைத் தவிர, அரசாங்கத்தின் உதவி தேவைப்படும் நபர்களையும் இந்த அமைப்பில் உள்ளடக்கியதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த அமைப்பில் முதியோர்கள், உடல் ஊனமுற்றோர், நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அரசிடமிருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர்களும் அடங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசின் நிதி உதவி தேவைப்படும் ஏனைய குடும்பங்களையும் இது இணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் நோக்கம், அந்த நலன்புரி நடவடிக்கைகள் தேவைப்படுபவர்களை அடையாளம் காணவும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் உதவுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...