follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசமுர்த்தி கொடுப்பனவுகளை சீர்செய்வதற்காக QR Code முறை அறிமுகம்

சமுர்த்தி கொடுப்பனவுகளை சீர்செய்வதற்காக QR Code முறை அறிமுகம்

Published on

சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக்கைகளை சீர்செய்வதற்காக QR Code முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

சமுர்த்தி பயனாளிகளைத் தவிர, அரசாங்கத்தின் உதவி தேவைப்படும் நபர்களையும் இந்த அமைப்பில் உள்ளடக்கியதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த அமைப்பில் முதியோர்கள், உடல் ஊனமுற்றோர், நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அரசிடமிருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர்களும் அடங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசின் நிதி உதவி தேவைப்படும் ஏனைய குடும்பங்களையும் இது இணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் நோக்கம், அந்த நலன்புரி நடவடிக்கைகள் தேவைப்படுபவர்களை அடையாளம் காணவும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் உதவுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...