follow the truth

follow the truth

June, 17, 2025
HomeUncategorizedIMF உடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் எங்கே? – விமல் வீரவன்ச

IMF உடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் எங்கே? – விமல் வீரவன்ச

Published on

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்ட ஊழியர்மட்ட ஒப்பந்தம் ஏன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஊழியர்மட்டத்தில் செய்துகொண்ட ஒப்பந்தம் ஏன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்பதை நாடு தெரிந்து கொள்ளவேண்டாமா என கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன,

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) வரைவு ஒப்பந்தம் மட்டுமே எட்டப்பட்டுள்ளதாகவும் இன்னும் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இலங்கையுடன் உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர்கள் சிலரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்ததாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஆனால் இறுதி ஊழியர் ஒப்பந்தம் இதுவரையில் எட்டப்படவில்லை என பிரதமர் கூறினால், அதை தாங்கள் ஏற்றுக்கொள்ளவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெரும்பான்மையைப் பெற்ற கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு

உள்ளூராட்சி நிறுவனங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அந்த நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்குமாறு அறிவிக்கப்படும்...

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்

பாகிஸ்தான் மீது இந்தியாவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப்...

JVP – NPP இரண்டிலும் மாற்றங்கள் எதுவுமில்லை – இரண்டும் ஒன்றுதான்

தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர...