follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுபாடசாலை மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை!

பாடசாலை மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை!

Published on

மேலும் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்த வகையில் 7,926 பாடசாலைகனைச் சேர்ந்த 1.08 மில்லியன் மாணவர்களை இலக்காகக் கொண்டு மதிய உணவுத் திட்டத்தை ஆண்டுதோறும் 4 மில்லியன் செலவில் செயல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வறுமையை ஒழிக்கும் கொள்கையின் கீழ், ஊட்டச்சத்து தொடர்பான எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்யும் நோக்கத்தில் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த அரசு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேலும் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான மதிய உணவு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறித்த மாவட்ட அளவிலான தரவுகளின் அடிப்படையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மதிய உணவு திட்டத்திற்கு கூடுதலாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...