பாடசாலை மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை!

596

மேலும் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்த வகையில் 7,926 பாடசாலைகனைச் சேர்ந்த 1.08 மில்லியன் மாணவர்களை இலக்காகக் கொண்டு மதிய உணவுத் திட்டத்தை ஆண்டுதோறும் 4 மில்லியன் செலவில் செயல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வறுமையை ஒழிக்கும் கொள்கையின் கீழ், ஊட்டச்சத்து தொடர்பான எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்யும் நோக்கத்தில் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த அரசு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேலும் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான மதிய உணவு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறித்த மாவட்ட அளவிலான தரவுகளின் அடிப்படையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மதிய உணவு திட்டத்திற்கு கூடுதலாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here