follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை வேண்டும் : ஜம்இய்யதுல் உலமா சபை அழுத்தம்

ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை வேண்டும் : ஜம்இய்யதுல் உலமா சபை அழுத்தம்

Published on

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜம்இய்யதுல் உலமா சபை இதனை தெரிவித்துள்ளது..

அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்று ஒரு தீவிரவாத தாக்குதல் நம் நாட்டில் அண்மையில் நடைபெற போவதாக ஞானசார தேரர் அவர்கள் 2021.09.13 ஆம் திகதி நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடிப்படையாக வைத்து இன்றைய பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஞானசார தேரர் அவர்களின் இக்கூற்றானது பொது மக்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் அதனைத் தொடர்ந்து இந்நாட்டில் வாழும் மக்கள் முகம் கொடுத்த பிரச்சினைகளையும், சவால்களையும் நாம் நன்கு அறிந்திருக்கின்றோம்.

எனவே, உரிய அதிகாரிகள் குறித்த தேரரின் கூற்று தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு இந்நாட்டின் பாதுகாப்பையும், இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இதன் உண்மைத் தன்மையை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறும் மிக அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.

அத்துடன், குறித்த தேரர் இஸ்லாம் பற்றி முன்வைத்திருக்கும் அடிப்படையற்ற குற்றச்சாற்றுக்களுக்கான பதில்களை வெகு விரைவில் நாம் வழங்குவோம் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....