follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுமே 9 வன்முறை – இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய...

மே 9 வன்முறை – இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய அனுமதி

Published on

மே 9 வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் இடமாற்றங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து 23 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இது குறித்த பொது பாதுகாப்பு செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி  தெரிவித்ததாவது, வன்முறைகள் இடம்பெறுவதைத் தடுப்பதில் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கடமை தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், புதிய பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கான  நேர்காணல்கள் முடிவடைந்தன, மேலும் 2022 அக்டோபர் 10 ஆம் திகதிக்குப் பிறகு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று பொது பாதுகாப்பு செயலாளர் மேலும தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...