follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுசுற்றுலா பயணிகளுக்கு புதிய எரிபொருள் அனுமதி அட்டை

சுற்றுலா பயணிகளுக்கு புதிய எரிபொருள் அனுமதி அட்டை

Published on

இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிச் சீட்டு திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரபல தொலைத்தொடர்பு பங்காளியும் எரிசக்தி அமைச்சருமான காஞ்சனா விஜேசேகரவின் ஒத்துழைப்புடன் சுற்றுலா பயணிகளுக்கான ‘Tap & Go’ Fuel Pass அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்.

சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்கும் திட்டமும் வழங்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கு உரித்துடையவர்கள் கட்டாயம் சுற்றுலா சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மேலும் கூறுகையில், அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் இலங்கை தொடர்பான சாதகமான தகவல்களை பரப்புவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

ஈரான் - இஸ்ரேல் மோதலின் தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று பிற்பகல்...

டிஜிட்டல் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

அரசதுறையில் சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு படியாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்...

இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கான அறிவித்தல்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என்று...