follow the truth

follow the truth

May, 24, 2025
Homeஉலகம்இருமல் சிரப்பை குடித்த 66 குழந்தைகள் பலி

இருமல் சிரப்பை குடித்த 66 குழந்தைகள் பலி

Published on

இந்தியாவில் தயாரான இருமல் சிரப்பை குடித்த 66 காம்பியா குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களில் பல்வேறு விதமான அத்தியாவசிய மருந்துகள் தயாரிக்கப்படும் நிலையில் அவை உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அவ்வாறாக காம்பியா நாட்டிற்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான இருமல் சிரப்பை குடித்த 66 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வகத்தில் இருமல் சிரப்பை ஆராய்ந்தபோது, அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக டை எதிலின் க்ளைகால் மற்றும் எத்திலின் க்ளைகால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup, Magrip N Cold Syrup என்ற இந்த 4 சிரப்புகளிலும் வேதியியல் பொருட்கள் நிர்ணயித்த அளவை விட அதிகமாக கலந்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த சிரப்புகளை ஹரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிக்கல் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்து தர நிர்ணய ஆணையம் மற்றும் மெய்டன் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்திற்கு உலக சுகாதார அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு...

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...