follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமுதல் பொப்பி மலர் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது!

முதல் பொப்பி மலர் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது!

Published on

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு இன்று (06) பகல் பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் சங்கத்தின் பொப்பி மலர் குழுத் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, ஜனாதிபதிக்கு முதலாவது பொப்பி மலரை அணிவித்தார்.

No description available.

உலகப் போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக
இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் சங்கம், வருடாந்தம் பொப்பி மலர் தினத்தை ஏற்பாடு செய்து வருகிறது.

இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது, போரில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற வீரர்களின் குடும்பங்களின் நலன்புரிக்காக செலவிடப்படுகிறது.

No description available.

இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் லெப்.கேணல் அஜித் சியம்பலாபிட்டிய, பொருளாளர் மேஜர் பி.கே.சி. சாந்திலால் கங்காணம்கே, பொப்பி மலர் நினைவுக் குழு உறுப்பினர்களான கெப்டன் டி.எம்.எச். மடுகல்ல, ஏ.பத்மசிறி, சூலனி சிறிமெவன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...