follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஐக்கிய மக்கள் சக்தியினால் 20 பிரேரணைகள் சமர்ப்பிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியினால் 20 பிரேரணைகள் சமர்ப்பிப்பு

Published on

நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் 20 பிரேரணைகள்  இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த பிரேரணைகள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

மக்களின் கழுத்தை நெரித்து, அதன் மூலம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

அறைக்குள் இருந்துகொண்டு இந்த நெருக்கடிக்கான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

கிராமங்கள், நகரங்கள் மற்றும் மக்களின் வீடுகளுக்கு அரசாங்கம் சென்று ஆராய வேண்டும் என கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதற்கான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...