follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஅத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

Published on

சதொச விற்பனையகங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, உருளைக்கிழங்கு, வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி, பருப்பு, கடலை, சம்பா அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு உருளைக்கிழங்கு 395 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 275 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பு 398 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி கிலோ ஒன்று 174 ரூபாவிற்கும் சம்பா அரிசி கிலோ ஒன்று 220 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் கடலை 650 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...