கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கு வசதியாக ரயில் திணைக்களம் இன்று முதல் சனிக்கிழமை தோறும் விசேட அதிவேக ரயில் சேவையை நடத்துகிறது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுராதபுரத்திற்குப் புறப்படும் இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொழும்பு கோட்டைக்குத் திரும்பும்.
இந்த ரயிலில் 480 இருக்கைகள் கொண்ட 10 முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதேநேரம் ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் 2500 ரூபாவாகும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.