தேசிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் ஹப்புத்தளை – இதல்கஸ்ஹின்ன குன்று பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அந்த பகுதிக்கு சுற்றுலா செல்லவும், இரவு நேரங்களில் கூடாரங்களை அமைக்கவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட இணைப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேஜர் சுதர்ஷன தெனிப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத செயற்பாடுகள், உயிர் ஆபத்தான அனர்த்தங்கள், வனப்பகுதிகளுக்கு தீ வைத்தல், உக்காத பொருட்களை எறிதலால் சுற்றாடலுக்கு மாசு ஏற்படுதல் போன்ற காரணிகளால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.