follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுமஹிந்தவின் புதிய ஆரம்பம்!

மஹிந்தவின் புதிய ஆரம்பம்!

Published on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ‘ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயத்தில் இன்று காலை இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய இந்தக் கூட்டத்தில், பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, தற்போதுள்ள அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்றுக்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பங்களித்த இளம் தலைமுறையினரால் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...