follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுவாய் புற்றுநோய் நோயாளர்களில் 70 சதவீதமானவர்கள் ஆண்கள்

வாய் புற்றுநோய் நோயாளர்களில் 70 சதவீதமானவர்கள் ஆண்கள்

Published on

நாட்டில் பதிவாகியுள்ள வாய் புற்றுநோய் நோயாளர்களில் 70 சதவீதமானவர்கள் ஆண்கள் என இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் பணிப்பாளர் அஜித் தன்தநாராயண தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக எமது செய்திப்பிரிவு வினவியபோது, மக்களிடம் தற்போது வாய் சம்மந்தமான நோய்கள் மற்றும் வாய்ப்புற்று நோய் என்பவை அதிகமாக காணப்படுவதாக குறிப்பிட்டார்.

வாய் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அருகில் உள்ள அரச பல் சிகிச்சை நிறுவனத்துக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டார்.

தற்போது மக்களிடையே பல் புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது.

இனிப்பு பண்டங்கள் உண்பது, குளிர்பானங்கள் குடிப்பதால் சிலருக்கு வாய் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.

அத்துடன் இவ்வாறான வாய்தொடர்பான நோய்களால் ஏற்படும் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் பணிப்பாளர் அஜித் தன்தநாராயண தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...